சனி, 25 ஜூன், 2011

எகிறி குதிக்கிறாய்
எட்டாக் கனியை
எட்டி பறித்திட...
ஏங்கி போனது கனிகள்

எட்டாமல்
போனதை எண்ணி...

விழி

உன் விழியீர்ப்பு விசையில்
வீழ்ந்தவனை,
மடியில் வைத்து
விசிறி விடுகிறாய்

உன் இமை விசிறிகளால்...

கூந்தல்

வாசமில்லா மலருக்கு
வாசம் தந்து
வாழ்வளிக்கிறது

அவள் கார்மேக கூந்தல்

காதல்

நிஜமென்று முத்தமிடுகிறேன்
அவள் உதட்டு நிழலை...

கனவென்று
கலைக்கிறேன்
தூங்கியும் விழித்த இரவை...

காதல் என்றே
கருதுகிறேன்
மறைமுகமாய் மலர்ந்த அவள் மௌன சிரிப்பை...

காதலியின் கடைசி அழைப்பு

எதிர்பார்த்த நேரங்களில் எல்லாம் அழைக்காதவள்

எதிர்பாராத நேரத்தில்
அழைத்து இருந்தாள்

அவள் திருமணத்திற்கு வர சொல்லி...

மோட்சம்

உன் கையால் உயிர் துறக்கவே,
அவசரமாக பிறவி எடுக்கிறது பூக்கள்...
மோட்சம் கிடைத்துவிடும் நம்பிக்கையில்

கண்கள்

தட்சணை எதுவும்
பெறாமல்
கற்றுக் கொடுக்கிறதே
உன் பட்டாம்பூச்சிக் கண்கள்...
கவிதை எழுதும் கலையை

நினைவுகள்

நித்தமும்
என்னை அழ வைத்து
சிரிக்கிறது
அவளை விட
அவள் நினைவுகள்...